இங்கே சொடுக்கு

Dec 29, 2010

முதலிரவு



சரசம் ஆடுகையில்
உரசும் உதடுகளால்
உஷ்ணம் உண்டாக்கு...!

மீறும் ஆசைகளை
மிச்சம் விடாமல்
என் உடம்பை புண்ணாக்கு..!

என் கன்னம் தின்று
நீ பசியாறிவிடு - எனை
பசியாக்கிவிடு -பின்
நீ பிசியாகிவிடு ..!

வியர்வைத் தண்ணீர் 
சுவடு போக்க
வீசும் தென்றலை விரட்டி வந்து
விடிய விடிய எனக்கு
விசிறி விடு..!

கட்டில் மெத்தை
கஸ்டமர் தேடுது
அடைக்கலம் கொடுத்து – எனை
அம்மாவாக்கிவிடு -புது
தொட்டில் தொங்கவிடு..!

உறங்கும் ஆசையை கிள்ளிவிடு
ஆனால்
தொட்டிலாட்டிவிடாதே..!

ஆண்மைக்கும் பெண்மைக்கும்
சண்டை மூட்டவிடு
வெற்றி என்பது
உனக்கென்றால்என்ன
எனக்கென்றால்என்ன
பரிசு என்பது
இருவருக்கும்தானே..!


ஆண்மை உண்மையாவது 
பெண்மையால்
பெண்மை உண்மையாவது 
ஆண்மையால்
உணர்ந்துவிடு எனை
உறங்கவிடதே..!

1 comment:

  1. சந்தத்தில் இனிக்கும் கவிதை...புது சந்திப்பில் இனிக்கும் கவிதை!!

    ReplyDelete